திருகோணமலையில் புத்தரால் பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை

திருகோணமலை பொது பஸ்நிலையத்தில் யாழ்ப்பாணம் செல்வதற்காக பஸ் நிலையத்திற்கு சென்ற பெண் ஒருவர் அணிந்திருந்த சேலையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் தனது பிள்ளை மற்றும் இன்னொரு வயதான பெண்ணுடன் திருகோணமலை நகரிற்கு ஆலய வழிபாட்டிற்காக வந்தபோது புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்தார்.

சேலையில் பொறிக்கப்பட்டிருந்த புத்த பெருமானின் உருவத்தைக் கண்ட சிங்கள்வர்கள் சிலர் குறித்த பெண்ணை சுற்றிவளைத்து சேலை தொடர்பாக பெண்ணிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் பஸ்நிலயத்தில் கடமையில் இருந்த பொலிசாரும் குறித்த இடத்திற்கு விரைந்தனர்.

அத்துடன் பொலிஸ் நிலயத்திற்கு முன்பாகவுள்ள விகாரையின் பௌத்ததுறவி தலமையிலான பலரும் அங்கு கூடியதுடன் பெண் மனம் புண்படியாகும் கருத்துக்களை வெளியிட்டதோடு பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு விரைந்த பொலிசார் குறித்த பிள்ளை மற்றும் இரு பெண்களையும் பொலிஸ் நிலயத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

குறித்த பெண்கள் பொலிஸ் ஜீப்பில் அழைத்து செல்லப்பட்டதை பஸ் நிலயத்தில் இருந்த பௌத்த ஆதரவாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிசார் மேற்கோண்டுள்ளனர்.