வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், மறைந்த அமைச்சர் தி.மகேஸ்வரனின் ஞாபகார்த்தமாக நிர்மாணிக்கப்பட்ட மகேஸ்வரன் மணிமண்டபத்தின் முன்பாக தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட அடியவர்களின் தாகம் தீர்க்கும் தாக சாந்தி நிலையம் அமைக்கப்பட்டிருந்தது.
குறித்த தாக சாந்தி நிலையத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முன்னின்று தாகம் தீர்க்கும் பானங்களை மக்களுக்கு பரிமாறியுள்ளார்.
பல நூற்றுக் கணக்கான அடியவர்கள் இராஜாங்க அமைச்சரிடமிருந்து தாகம் தீர்க்கும் பானங்களை வாங்கிப் பருகியிரு்நதனர்.