பிக்பாஸ் கவீன் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை… இப்படி ஒரு மோசடி செய்துள்ளார்களா? அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் !

பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி பிக்பாஸ் நிகழ்ச்சி கோலகமாக தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்த கவினும் போட்டியாளராக பங்கேற்றார்.

இவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்தே, பெண்களுடன் தவறாக பழகுகிறார். பெண்களை ஏமாற்றுகிறார் என்ற குற்றச்சாட்டுகள் அதிகமாக சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருந்தன.

இந்நிலையில், இவர் தற்போது சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கும் நிலையில், இவரது குடும்பத்திற்கு திடீர் சிக்கல் ஒன்று வந்துள்ளது.

அதாவது, சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த குற்றத்திற்காக கவின் குடும்பத்தைச் சேர்ந்த தாயார் உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.