மட்டக்களப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட வைத்தியர் சிவரூபன்- மக்கள் மத்தியில் அச்சம்!

கைது செய்யப்பட்ட பளை வைத்திய அதிகாரி சிவரூபனை பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் மட்டக்களப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவில் வைத்தியர் சிவரூபன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

அத்துடன் வைத்தியர் தெரிவித்ததாக கூறி வடபகுதியில் ஆயுதங்கள் பல மீட்கப்பட்ட நிலையில் தற்போது அவரை மட்டக்களப்பிற்கு ஆயுதங்களை மீட்க கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் வைத்தியர் சிவரூபனுடன் சென்ற படையினர் கொக்கட்டிச்சோலை காட்டுப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

இதேவேளை வைத்தியர் சிவரூபன் மட்டக்களப்பிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதால் விடுதலை புலிகள் மீள் உருவாக்கம் என்ற பெயரில் கிழக்கில் பலர் கைதுசெய்யப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.