சாரதியின் கவனக் குறைவால் யாழிற்கு சுற்றுலா சென்றவர்களின் ஏற்பட்ட பரிதாப நிலை

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக ஹொரணை மத்துகம பிரதேத்தில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று அதிகாலை 2.30 மணி அளவில் 458 ஹொரணை , மத்துகம வீதியின் மத்துகம நகருக்கு அருகில் கிரிகெட்டிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வேனின் பயணித்த 8 பேர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், மத்துகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெனியாய பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய சுற்றுலா சென்ற சிலரே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

இதேவேளை காயமடைந்தவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான வேன் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், மத்துகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.