கஸ்தூரியை சாவடிச்சிருப்பேன்… பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கிய சாண்டி..! கவின் மீது இவ்வளவு பாசமா?

பிக்பாஸ் வீட்டில், இன்று ஓபன் நாமினேட் ப்ராசஸ் நிகழ்ந்தது. அப்போது சாண்டி கண்கலங்கிய சம்பவம் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம் சமூக வலைதளங்களில் சாண்டி ஆர்மிகள் சாண்டியின் நேர்மையை பாருங்கள் என்று மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர்.

பிக்பாஅஸ் வீட்டில் இன்று ஓபன் நாமினேஷன் நடந்த போது, போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் உருக்கமாகவே பேசினர். அதில் சாண்டி கவினைப் பார்த்து நானும், அவனும் எப்போதும் ஒன்றாகவே சுற்றிக்கொண்டிருப்போம், ஒன்றாக பாட்டு பாடிக்கொண்டு, தாளம் போட்டுக்கொண்டு திரிந்தோம்.

ஆனால், தற்போது அவன் மாறிவிட்டான், என்னை பார்க்கும்போது கூட ஒரு மாதிரியாகவே பார்க்கிறான்.

இது ஒருபுறமிருக்க, கஸ்தூரி அக்கா, கவினைப் பார்த்து ஒருமுறை காமெடிபீசுனு சொன்னாங்க, அப்போலாம், எனக்கு செம கோவம் வந்துச்சு, அடிச்சி சாவடிச்சிடலாம்னு தோனுச்சி என்று கூறி கண்கலங்கினார் சாண்டி