அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஏழு மாதங்களின் பின்னர், மீண்டும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 182.17 ரூபாவாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 178.50 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து அந்நிய செலாவணி வெளிநாடுகளுக்கு சென்றமை, அந்நிய செலாவணி நாட்டுக்குள் வருவது குறைந்தமை என்பன இந்த நிலைமைக்கு காரணமாகும்.
இலங்கையில் காப்பீட்டு பத்திரங்களில் முதலீடுகளை செய்திருந்த வெளிநாட்டவர்கள், தாம் முதலீடு செய்திருந்த 12.3 பில்லியன் ரூபா பணத்தை ஒகஸ்ட் 28 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் அவற்றை திரும்ப பெற்றிருந்தனர்.






