யாழில் வீடு புகுந்து 15 பேர் கொண்ட கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல்!

கடந்த சில நாட்களுக்கு முன்னா் (4) சுண்டுக்குளி மத்தியூஸ் பகுதிகளில் இனம்தெரியாதவர்களால் வீடுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடா்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுக்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

அதோடு வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

குறித்த வாள்வெட்டுக் குழுவானது கஞ்சா, ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

சுமார் 15 பேர் கொண்ட குழுவே தாக்குதல் நடாத்தியதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அவரின் வீடு மற்றும் உடைமைகள் அடித்து சேதமாக்கியும் பெற்றோல் குண்டு வீசியும் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .