புலிகளே மக்களை கொன்றார்கள்-கோட்டா அவையில் முரளி தெரிவிப்பு

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே தனது வாழ்வில் முக்கியமான நாள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சமாதான பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளிற்கு நல்ல வாய்ப்புக்கள் வந்தபோதும் அவர்கள் மக்களை கொன்றதகவும் முரளி கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவான வியத்கம அமைப்பின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்.

அத்துடன் கிரிக்கெட் வீரர்களோ, ஏனைய துறைசார் வல்லனர்களோ நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது எனகூறிய முரளி, மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் சில விடயங்களை சாதித்த, மக்களை பாதுகாக்ககூடிய ஒருவரிற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.