பிக்பாஸ் வீட்டில் கேப்டன் பதவிக்கு வனிதா, தர்ஷன், லொஸ்லியா போட்டியிட்டனர். இதனால் லொஸ்லியாவுக்கு விட்டு கொடுக்கும் விதமாக இருவரும் வெளியேறினார்கள். இதனால் லொஸ்லியா தர்ஷனை ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டார்.
இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ காட்சியில், லொஸ்லியா ஏன் இப்படி செய்தாய் என கேட்டதுக்கு, தர்ஷன் இந்த வீட்டில் கேப்டனா நீ நின்னு ஏதாவது பண்ணி மக்களையும், இவங்களையும் புரூவ் பண்ணனும். அந்த சான்ஸ் உனக்கு கிடைக்கணும். அதனால தான் விட்டுக்கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.
அதன் பின் லொஸ்லியா ஒன்னுமே செய்யாதவங்க இப்போ வெளியிலே போய் இருக்காங்க. கடைசி கட்டத்தில இருக்க நீ இப்படி செய்யாதே என கூறியுள்ளார். இதை சேரன் ரகசிய அறையில் இருந்து கூர்ந்து கவனித்து வருகிறார்.