தலைவியானவுடன் லொஸ்லியா போட்ட அதிரடி சட்டம்! மகிழ்ச்சியில் குடும்பத்தினர்… வேடிக்கை பார்த்த சேரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கேப்டனாக லொஸ்லியா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சேரன் நேற்று ரகசிய அறையில் தங்க வைக்கப்பட்ட பிறகு, பிக் பாஸ் வீட்டில் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

இதனால் நிகழ்ச்சியில் விறுவிறுப்பு கூடியிருக்கிறது. யார் முந்தப்போகிறார்? யார் வெளியேறப்போகிறார்? எனும் பதற்றம் ஆடியன்ஸ் மத்தியில் நிலவுகிறது.

கடந்த வாரம் தலையணை டாஸ்கை சரியாக செய்யாததால் கவின் நேரடியாக நாமினேஷனுக்கு சென்றுவிட்டார். இந்த வாரம் தர்ஷன் விட்டு கொடுத்தமையால் லொஸ்லியா தலைவராகிவிட்டார்.

இந்நிலையில் இன்று தலைவியானவுடன் குழுக்களை பிரிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

உடனே எழுந்து லொஸ்லியா வீட்டில் குறைவான உறுப்பினர்கள் இருப்பதால் அனைவரும் வேலையை பகிர்ந்து செய்வோம். டீம் வேண்டாம் என்று அவரின் அதிகாரத்தை சிறந்த முறையில் பயன் படுத்தினார்.

இதனால், குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். சேரனும் ரகசிய அறையில் இருந்து நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தர்.