பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மிக உறுதியான போட்டியாளர் என்றால் தர்ஷன், முகென், கவின், சாண்டியுடன் ஈழத்து பெண் லொஸ்லியாவையும் கூறலாம்.
அந்த அளவிற்கு மக்களின் மனதில் இடம்பிடித்து வந்துகொண்டிருக்கின்றார். சமீபத்தில் இவர் நபர் ஒருவருடன் மாலையும், கழுத்துமாக இருந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன.
இதன் பின்னணி என்னவென்று புரியாத பலரும் லொஸ்லியாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா? என்ற குழப்பத்தில் இருந்து வந்தனர்.
தற்போது இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் சமூகவலைதளங்களில் தனது பதிவினை போட்டு விளக்கம் கொடுத்துள்ளார். தாங்கள் இருவரும் யார்? என்ற கேள்விக்கு மிகவும் தெளிவாகவும், அவதூரைப் பரப்பிய நெட்டிசன்களுக்கு சரியான பதிலடியாகவும் கொடுத்துள்ள பதிவு இதோ….
தவறான விடயங்கள் தொடர்ந்தேச்சையாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. #Losliya மற்றும் எனக்கிடையில் ஒரு நல்ல உறவு இருக்கிறது. அது விஷமிகள் எதிர்பார்ப்பதை போன்றவொன்றல்ல. அது ஆழமான ஓர் சகோதரத்துவம். அதை நம் பெற்றோர்களும் அறிவர்.விஷமிகளே நீங்கள் தோற்று விட்டீர்கள் #BB3 @iamharishkalyan pic.twitter.com/RUeUqtEx4c
— Fazlullah Mubarak (@FazlullahMTV) September 9, 2019