யாழ்.திருநெல்வேலியில் 4 தடவைகள் தற்கொலைக்கு முயன்ற சசீபனுக்கு சேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 4 தடவைகள் தற்கொலைக்கு முயன்ற இளைஞன் ஒருவர் மதுபோதையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 24 வயதுடைய த.சசீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,

குறித்த இளைஞன் தினமும் மது போதையில் வந்து வீட்டில் தகராறில் ஈடுபவார் என்றும், ஏற்கனவே அவர் 4 தடவைகள் தற்கொலைக்கும் முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் கையில் கயிற்றுடன் வந்தவர் வீட்டில் இருந்த தாய் , தந்தை மற்றும் சகோதரரை விரட்டியடித்ததோடு, தற்கொலை செய்யப்போவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாகஅவர்கள் அயலில் உள்ள வீட்டில் தங்கியிருந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பிய சமயம் குறித்த இளைஞர் படுத்திருந்த நிலையில் அவர் உறக்கத்தில் இருப்பதாக எண்ணியுள்ளனர்.

எனினும் இரவு 9.30 மணியளவில் தாயார் சென்று உணவு வழங்குவதற்காக எழுப்பியபோது அவரிடம் எந்தவிதமான அசைவும் இன்றிக் காணப்பட்டதனால். வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இளைஞன் உயிரிழந்திருந்தமை உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை உயிரிழந்த இளைஞனின் கழுத்தில் கயிறு இறுக்கிய அடையாளம் மட்டும் காணப்பட்டது.

இதேநேரம் குறித்த இளைஞனின் மரண விசாரணை நேற்றைய தினம் இடம்பெற்ற சமயம் தாய் மற்றும் மூத்த சகோதரன் ஆகியோர் கழுத்தில் அடையாளம் காணப்பட்டாலும் கயிறு பிறிதொரு இடத்திலேயே இருந்துள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து மரண விசாரணையை மேற்கொண்ட வைத்தியர் நமசிவாயம் – பிறேம்குமார் சடலத்தை பிரேதபரிசோதனைக்கு ஒப்படைக்க கோரியதோடு பரிசோதனையின் பின்னர் வழங்கும் சடலத்தினை புதைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.