செல்வச்சந்நிதி ஆலயம் சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்துள்ள விபரீதம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு இலக்காகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் பிற்பகல் அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு சென்று விட்டு முச்சக்கரவண்டியில் திரும்பிக் கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டிகளில் பயணித்தவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதியளிக்கப்படுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.