கனடா செல்லும் கனவுடன் பரிதாபமாக பலியான சுபஸ்ரீ ; விபத்து இப்படித்தான் நடந்தது! பதற வைக்கும் சிசிடிவி காட்சி…!

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது விளம்பர பதாதை (கட்டவுட்) விழுந்ததில் நிலை தடுமாறி விழுந்த பெண், தண்ணீர் லொறியில் சிக்கி உயிரிழந்த சம்பவர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ பள்ளிக்கரணை அருகே வீதியில் சென்றுகொண்டிருந்தார்.

அந்த வீதியின் நடுவில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக அதிமுக பிரமுகர் சார்பில் விளம்பர பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று வீதியில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவர் மீது தண்ணீர் லொறி ஒன்று ஏறி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் குறித்த விபத்து சம்பவம் தொடர்பான சிசிடிவி காணாளி வெளியாகியுள்ளது…