இலங்கையில் அதிகாலை வேளையில் புது மணப்பெண்ணுக்கு மர்ம நபர்களால் ஏற்பட்ட விபரீதம்! தாலி கட்டி 3ஆவது நாளே இப்படியா??

நானுஓயாவில் புதுமணப்பெண் ஒருவரின் தாலிக்கொடியை இனந்தெரியாத சிலர் கொள்ளையிட்டுள்ளனர்.

திருமணம் இடம்பெற்று மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று அதிகாலை இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நானுஓயா- கிளாரன்டன் மேற்பிரிவு பகுதியிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தம்பதியரின் வீட்டுக்கு இன்று அதிகாலை வேளையில் முச்சக்கரவண்டி ஒன்றில் பிரவேசித்த சிலர் அங்கிருந்தவர்களையும் மணப்பெண்ணையும் அச்சுறுத்தி மணப்பெண்ணின் தாலிக்கொடியையும் சுமார் மூன்று இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.