அரசுக்கு 4498 கோடி ரூபாய் வருமானம் கொடுத்த இலங்கை குடிமகன்கள்..!

கடந்த 2018ம் ஆண்டு மதுபானம் விற்பனை ஊடாக அரசுக்கு 4 ஆயிரத்து 498 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிகபடுகின்றது.

இதன்படி 180 மில்லி லீற்றா் மதுபான போத்தல்கள் 10 கோடியே 55 லட்சத்து 37 ஆயிரத்து 169 வி ற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன் ஊடாக அரசுக்கு 2121 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது, அதேபோல் 375 மில்லி லீற் றா் மதுபான போத்தல்கள் 4 கோடியே 31 லட்சத்து 15 ஆயிரத்து 920 விற்பனை செய்யப்பட்டதன் ஊடாக அரசுக்கு 1810 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

மேலும் 750 மில்லி லீற்றா் மதுபான போத்தல்கள் 5 கோடியே 35 லட்சத்து 68 ஆயிரத்து 92 விற்ப னை செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் ஊடாக அரசுக்கு 567 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

மொத்தமாக 7 கோடியே 45 லட்சத்து 91 ஆயிரத்து 229 லீற்றா் மதுபானம் 20 கோடியே 12 லட்சத்து 21 ஆயிரத்து 181 மதுபோன போத்தல்களில் விற்பனை செய்யப்பட்டதில், அரசாங்கத்திற்கு மொத்தம் 4498 கோடி அரசுக்கு வருமானம் கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.