வவுனியா உக்கிளாங்குளம் பகுதி வீடொன்றில் நிகழும் அதிசயம்! படையெடுக்கும் மக்கள்!

வவுனியா உக்கிளாங்குளத்தில் சீரடி சாய்பாபாவின் படத்தில் இருந்து திருநீறு கொட்டுவதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த அதிசயத்தை பார்வையிட பாபா பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உக்கிளாங்குளம் குட்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் வழிபடப்பட்டு வந்த சீரடி பாபாவின் படத்தில் இருந்தே சனிக்கிழமை முதல் திருநீறு கொட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் குறித்த வீட்டிற்கு இன்று காலையில் ஊடகவியலாளர்கள் சென்றபோது அங்கிருந்த சீரடி பாபாவின் பல புகைப்படங்களில் திருநீறு வீசப்பட்டது போன்று காட்சியளித்ததுடன் படத்தின் கீழும் திருநீறு காணப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில், தாம் 10 வருடங்களாக பாபாவை வணங்கி வருவதாகவும் புலம் பெயர் தேசத்தில் இருக்கும் தமது மகளின் வீட்டிலும் இவ்வாறு அதிசயம் இடம்பெற்ற நிலையில் தற்போது அவரது வவுனியா வீட்டிலும் இவ்வாறு அதிசம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.