யாழிலுள்ள கடையொன்றில் யோகட் வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! பெற்றோர்களே அவதானம்

யாழ். நிந்தவூர் பகுதியில் உள்ள கடையொன்றில் யோகட் வாங்கிய நபர் அது பூஞ்சனம் பிடித்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஒன்று தான் இவ்வாறு பழுதாகிவிட்டதென கருதி அதே கடையில் இன்னொரு யோகட் வாங்கியபோதும் அதுவும் அதே நிலைதான் இருந்துள்ளது.

அதாவது குறித்த யோகட் 17/09/2019 காலவதி திகதிக்கு முன்னரே பழுதடைந்திருக்கிறது. பொதிசெய்யப்பட்ட பொருட்கள் காலாவதியாகுவதற்க்கு முன் உள்ளே பழுதடைந்திருந்தால் அதற்க்கு குறித்த தயாரிப்பை உற்பத்தி செய்யும் நிருவனமே பொருப்பு.

உணவு கட்டுப்பாட்டு சபை பரிசோதனையின்றி விற்பனைக்கு வரும் உணவுப்பொருட்கள் தொடர்பாக கடைக்காரர்கள் அவதானமாக இருப்பதோடு வாடிக்கையாளர்களின் நலனிலும் அக்கரை செலுத்துங்கள்.

இதேவேளை, பிள்ளைகளுக்கு பொதிசெய்யப்பட்ட உணவுப் பொருட்களை வழங்குமுன் உடைத்து நன்கு பார்த்துவிட்டு குழந்தைகளிடம் கொடுங்கள். இல்லை அவதானகுறைவால் அப்படியே சாப்பிட வாய்ப்பிருகுகிறது என குறித்த சம்பவத்தில் பதிக்கபட்ட நபர் சமூக வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.