மன்னாரில் இஸ்லாமிய யுவதியை திருமணம் செய்து புரட்சியை ஏற்படுத்திய தமிழ் இளைஞன்

மன்னாரில் மதம் தாண்டி மனம் சேர்ந்த இருவரின் திருமணம் இன்று நடைபெறவுள்ளது.

அந்தவகையில் இஸ்லாமியப்பெண்ணான சம்றுத் என்பவரும் இந்து இளைஞனான வக்சனும் பல்வேறு எதிர்ப்புக்களையும் தாண்டி இன்றைய தினம் திருமணபந்தத்தில் இணைய உள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் பலரும் திருமண நல்வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

அத்துடன் காதலுக்காக அவர்கள் பெயரை மாற்றவில்லை, அவர்கள் அவர்களாகவே இருக்கின்றார்கள் என்றும் இதுதான் மதம் தாண்டிய உண்மைக்காதல், எனவும் முகநூல் வாசிகள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பல கருத்து வேறுபாடுகள் சமூகத்தில் கூறப்பட்டாலும் பலரும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது.