நகைச்சுவையில் கொடிகட்டி பறந்த நடிகர் செந்திலின் பரிதாபநிலை… தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் தனது நகைச்சுவையினால் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைநின்று கொண்டிருப்பவர் தான் நகைச்சுவை நடிகர் செந்தில்.

செந்தில், கவுண்ட மணி இருவரும் தனது கொமடித்திறமையினால் பல படங்களில் கலக்கி ரசிகர்களை வயிறு வலிக்க வைத்துள்ளனர்.

குறிப்பாக ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படத்தில் இவர்களின் நடிப்பே தனிதான். இன்றும் அந்த வாழைப்பழ கொமடி அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.

கொமடியில் இவ்வாறு கலக்கிவந்த செந்தில் சினிமாவிற்கு வந்தது எப்படி? என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தான் 13 வயதிருக்கும் போது வீட்டில் ஏதோ குறும்புத்தனம் செய்துவிட இதனைப் பெற்றோர்கள் கண்டித்ததால் கோபித்துக்கொண்டு ஊரை விட்டு சென்னை வந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இவர்.

தற்போது சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர், மீண்டும் சின்னத்திரையில் கால்பதித்துள்ளார். பிரபல ரிவியில் ஒளிபரப்பவிருக்கும் ராசாத்தி என்ற தொடரில் செந்தில் நடித்துள்ளார். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரது நடிப்பில் எந்தவொரு மாற்றமும் இல்லாதததைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.