அரைநிர்வாண ஆடையுடன் மணமேடையில்..! கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகும் ஈழத்தமிழ் ஜோடி

வெளிநாடு சென்றதுமே நம் பாரம்பரியத்தை பல தமிழர்கள் மறந்து வருகின்றனர் என்பது சமீபகாலமாக இருக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.

இதற்கு எடுத்து காட்டாக அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பான பேஸ்புக், டுவிட்டர் பதிவுகள் பலவும் வைரலாகி வருகின்றன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத்து தமிழர்கள் .நீங்கள் படித்து பட்டம் பெற்றா வெளிநாட்டில் தஞ்சம் போனீர்கள்? நாட்டில் ஏற்ப்பட்ட யுத்தத்தை காரணம் காட்டி அல்லவா தஞ்சம் புகுந்தாய்.

யுத்தம் முடிந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகின்றது நீங்கள் சாதித்த சாதனை என்ன பட்டியல் போட்டு காட்ட முடியுமா ?

இங்கு யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டு உடமைகள், உடல் அங்கங்களை இழந்த எத்தனையோ மக்கள் உள்ளனர். அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ?நீங்கள் வாழும் சொகுசு வாழ்க்கை இங்கு ஏழையாக வாழும் தமிழன் போட்ட பிச்சை தான்.

ஆனால் நீங்கள் தமிழ் கலாச்சாரம் .தமிழ் பண்பு அத்தனையும் குழி தோண்டி புதைத்து கொண்டு உள்ளீர்கள். பிறந்த நாட்டுக்கு உதவ முடியாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.