இறுதி நேரத்தில் ரணிலின் வரலாற்று வெற்றி! சஜித் தொடர்பில் பிரதி அமைச்சர் கூறும் விடயம்

இறுதி நேரத்தில் ரணில் விக்ரமசிங்க வரலாற்று வெற்றிக்கான சாட்சியாக இருப்பார் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்காவிட்டால் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பயனில்லை.

அவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை பெற்றுக் கொடுக்கும் போராட்டத்தில் எப்படியாவது வெற்றிப்பெறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.