நித்தியானந்தா ஆசிரமத்தில் கதறிய சிறுவர்கள்… பல ரகசியங்களை உடைத்த கனடா பெண்

கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்ற பெயருடன் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு வந்து துறவறம் மேற்கொண்டு ஆச்சார்யாவாகப் பணியாற்றியவர் பல திடுக்கிடும் உண்மைகளைக் கூறியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி என்ற இளம் பெண் நித்யானந்தா மக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் அங்கு நடக்கும் சில உண்மைகளை 30 நிமிட காணொளியாக வெளியிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

சாரா என்ற தனது பெயரை ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்று மாற்றிக்கொண்டு நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்த இவர் இங்கு நடக்கும் விடயங்கள் அனைத்தும் பொய் என்று தற்போது தனது சொந்த நாட்டிற்கே சென்றுள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், நித்தியானந்தா ஆசிரியமத்திலிருந்து கடந்த வரும் ஆகஸ்ட் மாதம் வெளியே வந்த எனக்கு, அங்கு பல விடயங்கள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமின்றி அங்கு நடக்கும் தவறுகள் என்னை ஆசிரமத்திலிருந்து வெளியே செல்ல வைத்தது.

கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் நான் திருவனந்தபுரத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு ரகசிய பணிக்காக அனுப்பப்பட்ட போது அங்கிருந்த சிறுவர், சிறுமியர்களுக்கு பல பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

அங்குள்ள குழந்தைகளுக்கு சமூகவலைத்தளம் பயன்படுத்துவதையும், அதில் அவர்களை செயல்பட வைக்கும் வேலைக்கு அங்கு சென்றதால் அனைவரும் என்னிடம் நெருங்கிப் பழகினார்கள்.

திடீரென ஒரு நாள் இரவு எனது அறையில் இருந்துகொண்டிருந்த தருணத்தில் இரண்டு சிறுவர்கள் என்னிடத்தில் கதறி அழுது, “நித்யானந்தா செய்வது எல்லாமே பொய்” என்றும், நாங்கள் இரும்புக் கம்பிகள் நிறைந்த அறையில் சிறை வைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

பின்பு இதுகுறித்து நித்யானந்தா ஆசிரமத்தின் மூத்த அதிகாரிகளான நித்யானந்தா, ரஞ்சிதா மற்றும் திருவனந்தபுரம் ஆசிரமத்தை நடத்துபவர் ஆகியவர்களிடம் பேசினேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அந்த குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.