விமானத்தில் காற்று வாங்க பெண்செய்த செயல்! கடைசியில் நடந்தது என்ன?

காற்று வாங்குவதற்காக, தான் பயணித்த விமானத்தின் அவசர வழி ஜன்னலை திறந்து வைத்த பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

சீனாவின் யூஹன் நகரிலிருந்து லன்ஹூ நகருக்கு, பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை புறப்பட விருந்தது.

விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், பயணிகள் தங்கள் சீற் பெல்ட்களை அணிந்து கொள்ளும்படியும், அவசர வழி அருகே அமர்ந்திருக்கும் பயணிகள், தங்களது இருக்கையின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல்கள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளுமாறும் விமான பணிப் பெண்கள் அறிவுறுத்தினர்.

அவர்களின் அறிவுறுத்தலையும் மீறி, பெண் பயணி ஒருவர், தனது இருக்கைக்கு அருகில் இருந்த அவசர வழி ஜன்னலை திறந்து வைத்திருந்துள்ளார். இதைக் கண்டு கடுப்பான விமான பணிப் பெண், திறந்திருந்த ஜன்னலை மூடிவிட்டு சென்றுள்ளார்.

அவர் அப்படி சென்றதும், அந்த பெண் பயணி ஜன்னலை மீ்ண்டும் திறந்துள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த பணி்ப் பெண், ஏன் இவ்வாறு வீம்பு செய்து கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டதுக்கு, “விமானத்துல ஒரே புழுக்கமா இருக்கு… அதான் காத்து வரட்டுமேன்னு ஜன்னலை திறந்து வைத்தேன்” என கூலாக பதிலளித்துள்ளார் அப்பெண்.

பெண் பயணியின் கூலான இச்செயலால், விமானம் புறப்படுவதில் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கதவை திற…காற்று வரட்டும்…என்ற ரீதியில் நடைபெற்ற இச்சம்பவத்தை, கைதான பெண் பயணியின் தோழி வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.