கனடாவில் கொல்லப்பட்ட தர்ஷிகா தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

கனடாவில் கணவர் சசிகரனால் கொல்லப்பட்ட இலங்கைப் பெண் தர்ஷிகா தொடர்பில் தற்போது, புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் கடந்த செப்ரெம்பர் 11 ஆம் திகதி கொல்லப்பட்ட தர்ஷிகா, இளைஞர் ஒருவருடன் பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படம் ஒன்று தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படத்தில் தர்ஷிகாவுடன் இருக்கும் இளைஞர் அவருக்கு உறவினரா? அல்லது தர்ஷிகா மறுமணமானவாரா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

தர்ஷிகாவின் வாழ்க்கை சிதைவதற்கும் அது கொலையில் முடிவதற்கும் அதுவும் ஒரு காரணம் என பரவலாக பேசப்படுகிறது.

அத்துடன், அவரது கணவர் சசிகரன் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர் என்ற தகவலும் பரப்பப்பட்டது.
இந்த முக்கிய காரணங்கள் தொடர்பில், வெளியாகிய புகைப்படங்கள் மற்றும் சாட்சிகள் மக்களிடையே பல்வேறு விதமான கேள்வியை எழுப்புகின்றது.எனினும் இந்த வழக்கு நீதிமன்றில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு வெளிவரும்போதே அதன் உண்மை வெளிவரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.