சுவிட்சர்லாந்தில் கிளிநொச்சி மாணவன் அகவினியன் சாதனை

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவனும், மாவீரன் கலையழகனின் மகனுமான அகவினியன் , சுவிஸில் சாதனை படைத்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக ஏதிலியாக சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்ற மாவிரன் கலையமுதனின் மகன் அகவினியன் சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.

சுவிஸிற்கு சென்று சரியாக 2 வருடங்களின் பின்னர் அந்த நாட்டிலே விமான ஓட்டியாக பயிற்சி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தன்னினத்திற்காய் உயிர் நீத்த மாவீரன் கலையழகனின் மகன் புலம் பெயர் நாட்டில் சென்று சாதனை படைத்துள்ளமைக்கு பலரும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

இதேவேளை எங்கு சென்றாலும் ஈழத்தமிழர்களிற்கே உரிய சாதனை திறன்மிகுகுணம் மாவீரன் கலையழகனின் மகனான அகவினியனிடமும் உள்ளமை ஈழத்தமிழர்கள் பெருமை கொள்ளவேண்டிய விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.