கணவன் வெளிநாடு சென்று 5 நாள்! யாழ் யுவதியின் விபரீத முடிவால் அதிர்ச்சியில் குடும்பம்

சாவகச்சேரி, மந்தவில் பகுதியில் பதிவு திருமணமாகி ஒரு மாதத்தில் இளம் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து இன்று காலை உயிரை மாய்த்துள்ளார்.

உயிரை மாய்த்த அன்ரனி டயானா (20) என்ற யுவதி ஒரு மாதத்தின் முன்னர் பதிவு திருமணம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், 5 நாட்களின் முன்னர் கணவன் வெளிநாடு சென்றுள்ள நிலையிலேயே உயிரை மாய்த்துள்ளார்.

மாமியாருடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் அவர் உயிரை மாய்த்ததாக, உறவினர்கள் மரண விசாரணையில் தெரிவித்தனர்.

யுவதியி உடல் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.