எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து 4 இந்திய மீனவர்கள் நேற்று இரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களுடன், படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட குறித்த 4 மீனவர்களும், காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டு அங்கு மலேரியாப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று மதியம் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கைதுசெய்யப்பட் மீனவர்கள், தமிழ்நாடு கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.