அம்மா அப்பா இருவரும் மருத்துவர்கள் நானும் மருத்துவராவேன்; யாழில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவன்!

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோகநாதன் ஆருஷன், 2019ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

தந்தை, தாய் இருவரும் மருத்துவர்கள். அவர்களின் வழியில் தானும் மருத்துவராக வந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று மாணவன் ஆருஷன் தெரிவித்தார்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை கடந்த கால வினாத்தாள்களை செய்துகொள்ளுவன். புரியாதவற்றை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வேன்.

பாடசாலையில் கற்பிக்கும் பாடங்களை அன்றைய தினமே மீளக் கற்றுக்கொள்வேன். இதுவே எனது சிறந்த பெறுபேற்றுக் காரணமாக அமைந்தவை.

என்னை வழிப்படுத்திய பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள் என்று மாணவன் ஆருஷன் தெரிவித்தார்.