என்று பிரபாகரன் தலையெடுத்தானோ அன்றே தமிழினத்தை உலகறிந்தது! பாரதிராஜா நெகிழ்ச்சி

என்றைக்கு பிரபாகரன் தலையெடுத்து நின்றானோ அன்றுதான் தமிழர்கள் பெருமை கொண்டனர் என இயக்குநர் இமயம் பாரதிராஜா பெருமையாக பேசியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியிருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமை உலக அளவில் போற்றப்பட்டது.

மேலும் கூறிய அவர், “பெரும் கலைஞர்கள், அறிஞர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் பிறந்து தமிழைப் பற்றி சொன்னார்கள். அகநானூறு, புறநானூறு எல்லாம் கூறினார்கள். அப்போது கூட தமிழர்கள் உலக அளவில் கவனிக்கப்படவில்லை.

என்றைக்கு பிரபாகரன் தலையெடுத்து நின்றானோ அன்றுதான் தமிழர்கள் பெருமை கொண்டனர்.

கறுப்பு நிறத்தைப் பார்த்தால் நீ யார் என்று கேட்பார்கள். தமிழன் என்று சொன்னால் பிரபாகரன் பூமியா என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு தமிழினத்தையும் மொழியையும் உலகிற்கு அடையாளம் காட்டியது பிரபாகரன் என்றார்.