மன்னிச்சுக்கோ மா…: உயிரை மாய்க்க முன்னர் தாயாருக்கு கடிதம் எழுதிய முல்லைத்தீவு இளைஞன்!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.

முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2 மணியளவில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

சற்று நேரத்தில் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். உயிரை மாய்ப்பதற்கு முன்பாக தாயாருக்கு கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார்.

சிறு வயது முதல் தந்தை இன்றி தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.