சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சி – எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள்களின் விலை, விலைச்சூத்திரத்திற்கு அமைய மாதாந்தம் 10ஆம் திகதி திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) எரிபொருள் விலைச்சூத்திரக் குழு மாலை 6.00 மணியளவில் கூடவுள்ளது.

கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி எரிபொருள் விலைச்சூத்திரக் குழு கூடியபோது, ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெட்ரோல் விலை ஒரு ரூபாயினாலும், ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெட்ரோல் விலை இரண்டு ரூபாயினாலும் குறைக்கப்பட்டது.

அத்தோடு கடந்த மாதம் ஒரு லீற்றர் சுப்பர் டீசல் விலை இரண்டு ரூபாயினால் குறைக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.