வவுனியா கொக்குவெலிய பகுதியில் காணாமல்போன 86 வயதான மூதாட்டி ஒருவர் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரின் சடலம் இன்று காலை பேயாடிபுளியங்குளம் குளப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மாமடு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா கொக்குவெலிய பகுதியில் மகளுடன் வசித்து வந்த விஜயலட்சுமி எனும் குறித்த மூதாட்டி நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை மாடு மேய்ப்பதற்கு குளப்பகுதிக்கு சென்றவர்கள் மூதாட்டியின் சடலத்தை அவதானித்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
மூதாட்டி குளிப்பதற்காக குளப்பகுதிக்கு சென்றதாகவும் எனினும் தாம் குளப்பகுதியில் தேடியபோது மூதாடி அங்கிருக்கவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறன நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாமடு பொலிசாருடன் இணைந்து இராணுவமும் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.