ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து கொழும்பு காலி முகத்திடலில் நேற்று மாபெரும் பேரணி நடைப்பெற்றது.
இந்த நிலையில் அங்கு இடம்பெற்ற கூட்டத்தை அடுத்து துப்பரவு செய்யும் பணிகளில் மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையிலான அணியினர் ஈடுபட்டனர்.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் முதலாவது பேரணியொன்று இடம்பெற்றது.
இதில் அதிகளவிலான பொதுமக்கள் கலந்துக்கொண்டிருந்தனர்.
இதன்போது மக்கள் பயன்படுத்திய போத்தல்கள் , பொலித்தீன்கள் என்பன வீசப்பட்ட நிலையில் மேயர் தலைமையிலான அணியினர் அதனை சுத்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செயலை பாராட்டி சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றமையும் குறிப்பிடத் தக்கது.