விசுவமடு கூட்டுப் பாலியல் விவகாரம்!! யாழ் மேல் நீதிமன்றம் இராணுவத்தினரிற்கு வழங்கிய தீர்ப்பு

விசுவமடு கூட்டுப் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவித்து விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2010ஆம் ஆண்டு விசுவமடு பகுதியில் பெண் ஒருவரை கூட்டாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 2015ஆம் ஆண்டு மூன்று இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

இந்த தண்டனை மற்றும் தீர்ப்புக்கு எதிராக, குற்றவாளிகள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில், நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர், படையினர் மூவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.

அத்தோடு குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சாந்த சுபசிங்க, தனுஷ்க புஸ்பகுமார, பிரியந்த குமார ஆகிய மூன்று இராணுவத்தினரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

புஷ்பகுமார சார்பில் முன்னிலையாகிய சட்டவாளர் ரஞ்சித் பெர்னாண்டோ, இலங்கை படையினர் மீதான குற்றச்சாட்டுகள் ஒரு தீவிரவாத குழுவினால், வேண்டுமென்றே தீய நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டன என வாதிட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.