கடும் ஏமாற்றத்தில் முன்னாள் இராணுவ தளபதி!

ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

அதற்காக கொழும்பில் முதலாவது பிரச்சார நடத்தியிருந்தார். இந்த கூட்டத்தில் மிகவும் குறைந்த மக்களே கலந்து கொண்டுள்ளனர்.

பிரச்சார கூட்டத்திற்காக புதிய மேடை ஒன்று அமைத்து பாரியளவு மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஆனால் 150 – 200 பேர் மாத்திரமே அதிகப்படியாக அங்கு கலந்து கொண்டனர். இதனால் முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க கடும் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.