யாழில் நண்பர்களுடன் மது அருந்தியவருக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணம் அளவெட்டியில் நண்பர்கள் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போது நபர் ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவருடன் கூட இருந்த ஏனையவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மதியம் யோகன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.