மாணவனை டியூசன் வருமாறு அழைத்து ஆசிரியை செய்த அருவருக்கத்தக்க செயல்..!

மொனராகலை அரச பாடசாலையொன்றில் கடமையாற்றி வரும் 41 வயதான ஆசிரியை ஒருவர் , 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 15 வயது நிரம்பிய மாணவனை , தமது வீட்டிற்கு டியூசன் வகுப்பிற்கு வருமாறு அழைத்து மாணவனுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவன் வீட்டிலிருக்கும் போது, ஆசிரியை அடிக்கடி தொலைபேசி மூலம் மாணவனிடம் தொடர்பு கொண்டதை அறித்த மாணவனின் தாய் சந்தேகம் கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவர் மகனுக்குத் தெரியாமல் மகனின் தொலைபேசியை எடுத்து ஆராய்ந்தபோது அதில் ஆசிரியையிடமிருந்து மகனுக்கு வந்த தவறான குறுந்தகவல்களைக் கண்டுள்ளார்.

இது குறித்து மாணவனின் தாய் மொனராகலைப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து பொலிசார் ஆசிரியையையும் மாணவனையும் நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த ஒருவருடமாக மாணவனை கட்டாயப்படுத்தி தமது வீட்டிற்கு வரவழைத்து ஆசிரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இவ்விருவரையும் மொனராகலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யமுன்பு, மாணவனின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ள வேண்டி மொனராகலை வைத்தியசாலையில் மாணவனை பொலிசார் அனுமதித்ததோடு, சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த ஆசிரியை இரு பிள்ளைகளுக்கு தாயானவர் என்றும் கணவரை விட்டு பிரிந்து வாழ்பவரென்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.