பொலிஸ் நிலையம் சென்ற கர்ப்பிணி மனைவி மாயம்! பதற்றத்தில் கணவன்

காணி தொடர்பான விசாரணைக்காக மட்டக்களப்பு காட்டு கந்தோர் பொலிஸ் நிலையத்திற்கு கடந்த 26 ஆம் திகதி சென்ற தனது மனைவி அங்கிருந்து காணாமல் போயுள்ளதாக கணவர் மனோ கிரிதரன் தெரிவித்துள்ளார். குறிப்பிட்டுள்ளார்.

நான்கு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது மனைவி காணாமல் போனமை ஒரு திட்டமிட்ட கடத்தல் என அவர் கூறியுள்ளார்.

அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் தனக்கு அறியத்தருமாறும், தன்மனைவியை கண்டுபிடிக்க உதவுமாறும் அவர் சமூகவலைதளமூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

சகாயமேரி பற்றி தெரிந்தவர்கள் இந்த இலக்கத்தில் 0765804116 தொடர்புகொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.