ஐரோப்பிய நாடொன்றில் கோர விபத்து – யாழ். இளைஞன் பலி

இத்தாலியில் ஏற்பட்ட கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

26 வயதான ஷர்மிலன் பிரேம்நாத் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இலங்கை இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் தடம் புரண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சடலத்தை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு உறவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.