வடமராட்சியில் 10 வயது பாடசாலை மாணவிக்கு நேர்ந்த சோகம்!

வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் தரம் 5 கல்வி கற்றுவரும் மாணவி சுதாகர் திவியந்தி (வயது 10 ) சுகயீனம் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

இமையாணன் மேற்கு பகுதியில் வசித்து வந்த குறித்த மாணவி இதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை வந்துள்ளார்.

சம்பவதினம் அதிக சுகயீனம் ஏற்பட்டதை அடுத்து மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

மாணவியின் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.