பிரபல அமைச்சரின் மனைவி மஹிந்தவிடம் மன்றாட்டம்!! தென்னிலங்கை அரசியல் மீண்டும் பரபரப்பு

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மனைவி சுஜாதா சேனாரத்ன, எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, தன்னுடைய கணவனை, பொதுஜன பெரமுனவில் சேர்ந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என அறியமுடிகின்றது.

பொதுஜன பெரமுனவுடன் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு இதற்கு முன்னர் ராஜித்த சேனாரத்ன கோரிக்கை விடுத்திருந்த போதிலும், பெரமுனவைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைவார் என்பதை உணர்ந்துகொண்ட ராஜித்த, அரசியல் கரணமடிக்கும் தன்னுடைய முயற்சியை இன்னும் கைவிடவில்லை என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

கட்சித் தாவல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த சம்பவம் மீண்டும் தென்னிலங்கை அரசியலில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.