அரசாங்க ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

2020ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டுக்கான குறைநிரப்பு நிதி ஒதுக்கீடின் ஊடாக அரச ஊழியர்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று நிதி முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பள மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைய அரச ஊழியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படும்.

இந்த அதிகரிப்பின் அரைவாசி பகுதி அடுத்து வருட ஜனவரி மாதத்திலிருந்து வழங்கப்படும். மீதிப் பகுதி 2021ம் ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து வழங்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.