80 மணித்தியால போராட்டத்தில்..! சற்று முன்னர் சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது

திருச்சி – நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜிதின் உடல் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த நிலையில், இன்றிரவு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த நிலையில், சிறுவனை மீட்கும் நோக்கில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், நீண்ட நேர போராட்டத்தின் பின் சுர்ஜித்தின் உடல் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளது.

சிறுவன் சுர்ஜித்தின் மரணம் பல்வேறு தரப்பினரின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.