சுர்ஜித்தின் அம்மா சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த பக்கத்தில் நர்ஸ் ஒருவர் சிரித்தபடி நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 2 வயது சிறுவனான சுர்ஜித் மரணமடைந்ததை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் ஆழ்துளை கிணறுகளை மூடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தன் மகனின் இறப்பே கடைசியாக இருக்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் கோவில் கட்டுவதே தனது ஆசை எனவும் சுர்ஜித்தின் தாய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சுர்ஜித் இறந்த செய்தி கேட்டதும், நேரில் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுர்ஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த நர்ஸ் ஒருவர் சிரித்தபடி நிற்கும் புகைப்படம் வெளியாகி பலரது கண்டனங்களை பெற்று வருகிறது.