சஜித்தின் அதிரடி அறிவிப்பு! கடும் அதிர்ச்சியில் ரணில்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் எனது அமைச்சரவையில் ஊழல் மோசடி செய்தவர்களுக்கு இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதுவரை நான் சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை மாத்திரமே நியமிக்க திட்டமிட்டுள்ளேன். வேறு யாரையும் நான் நியமிப்பதாக இன்னும் அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தாமே பிரதமராக தொடர்ந்து இருக்கப் போவதாக சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்திருந்தார்.

அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபில் பிரதமர் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சஜித் பிரேமதாஸவின் அறிவிப்பனை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.