வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்த தென்னிலங்கை அரசியல்வாதி

தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மற்றும் அவரது சாரதியும் இணைந்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வெளிநாட்டு பெண்ணொருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சீனாவை சேர்ந்த பெண்ணொருவரே காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் பொலிஸார் அதற்கு ஒரு பதிலையும் வழங்கவில்லை என சீன பெண் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ ஒன்றின் ஊடாக கருத்து வெளியிட்ட அந்த பெண், தான் முறைப்பாடு செய்த போதிலும், முன்னாள் உறுப்பினர் விசாரணைகளுக்கு அரசியல் அழுத்தம் பிரயோகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் சந்தேக நபரை கைது செய்வதற்கோ அல்லது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கோ பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரின் சகோதரரும் இன்னும் ஒரு தென் மாகாண சபையின் உறுப்பினர் ஒருவரும் தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவிய போது, சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.