கொங்கிரீட் இடப்பட்ட பதுங்குகுழி! கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் தனியார் காணியொன்றில் கொங்கிரீட் இடப்பட்ட பதுங்குகுழி போன்றதான கட்டிட அமைப்பொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை, குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், அங்கு கொங்கிரீட்டினாலான கட்டமைப்பு ஒன்றை அவதானித்துள்ளனர்.

இதனை அடுத்து அவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த பதுங்கு குழியினை பார்த்து அதிச்சி அடைந்துள்ளனர்.

அத்துடன் அது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவமானது ஜெயந்திநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த காணியின் உரிமையாளர், யுத்த இடம்பெற்ற காலப்பகுதியில் அங்கு வசிக்காத நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டே மீள் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.