இன்று பாடசாலை முடிந்தவுடன் கனகராயன்குளத்திலிருந்து மாங்குளம் வரையில் செல்லும் மாணவர்கள் பேரூந்திற்காக காத்திருந்த வேளையில்,
வவுனியாவிலிருந்து யாழ்நோக்கி வந்த கௌசிகா பேரூந்து கிட்டத்தட்ட 50ற்கு மேற்பட்ட மாணவர்களை ஏற்றியது மட்டுமல்லாமல் எந்த மாணவரிடத்திலும் கட்டணம் அறவிடவில்லை.
மழையில் சிக்காமலும் நேரகாலத்துடனும் மகிழ்ச்சியாக வீடு சென்றனர் மாணவர்கள்.
குறுந்தூரம் என்று மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் தவிர்க்கின்ற பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இவர்களின் முன்னுதாரணமான செயல் நிச்சயம் ஒரு பாடம் புகட்டும் என மூகநூல் புத்தக்கத்தில் குறித்த தகவலை சமூக ஆர்வலர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.